Posts

Showing posts from March, 2023

நான் வளர்கிறேனே மம்மி - 01

1984  நாமக்கல் ஃபாத்திமா ஆர்.சி துவக்கப் பள்ளி  நான்காம் வகுப்பு E பிரிவு. கல்வி ஆண்டு துவங்கிய சில நாட்களில் ஒரு நாள் வகுப்பாசிரியர் திருமதி இருதயமேரி அவர்கள் தமிழ்வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  வளம் + செய்கின்றன = என்ன வரும் சொல்லுங்கள் என்கிறார்.  மாணவர்கள் அனைவரும் அமைதி காக்க... யாராச்சும் சொல்லுங்க. யாருக்கும் தெரியலையா?... கிராமத்துப் பள்ளியில் இருந்து மாற்றலாகி வந்த மாணவன் ஒருவன் கையை உயர்த்துகிறான்.  என்ன? உனக்குத் தெரியுமா? சொல்...   "வளஞ்செய்கின்ற" என்கிறான் அந்த மாணவன்.  சபாஷ். சரியான பதில். எல்லோரும் கை தட்டுங்க என்று பாராட்டுகிறார் அந்த ஆசிரியை.. அந்த மாணவன்தான்.... இந்தப் பதிவை எழுதியவர்